வேட்டுவ மன்னன் "வல்வில் ஓரி"






















பெயர் கேட்க நாணினன்! 


விவரங்கள்
பல ஆசிரியர்கள் ஆல் எழுதப்பட்டது
பாடியவர் : வண்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண். துறை: பரிசில் விடை.
சிறப்பு: ஓரியது பெருமித நிலையின் விளக்கம்; அவன் வேட்டுவக் குடியினன் என்பது.
( பரிசில் பெற்ற புலவர், அவனை வியந்து பாடியது இச் செய்யுள்)

`வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,
புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான்: வெறுக்கைநன்கு உடையன்:
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்,
ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;
கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்:
எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பையென இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தமின்` என்று,
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,
மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்,
`கோ`வெனப் பெயரிய காலை, ஆங்கு அது
தன்பெயர் ஆகலின் நாணி, மற்று, யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப் போர்` என,
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்,
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் கு வையடும் விரைஇக், `கொண்ம்` எனச்,
சுரத்துஇடை நல்கி யோனே : விடர்ச் சிமை
ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்,
ஓம்பா ஈகை விறல்வெய் யோனே!



புறநானூறு 152 வல்வில் ஓரி


வல்வில் ஓரி கொல்லிப் பொருநன் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். அவன் தனக்கு எங்கே எவ்வாறு பரிசளித்தான் என்பதைப் புலவர் வன்பரணர் நிரல்பட விளக்குகிறார்.
ஓரியின் வல்வில் வேட்டம்
ஓரி அம்பு எய்தான்.முதலில் அது யானையை வீழ்த்தியது. அடுத்து உழுவைப்புலியைச் சாகடித்தது. அடித்து மானை உருண்டுவிழச் செய்த்து. அடுத்து முள்ளம்பன்றியை வீழ்த்தியது. இறுதியாகப் புற்றிலிருந்த உடும்பின் உடலில் தைத்துக்கொண்டு நின்றது.
இப்படிக் கொன்றவன் விற்பனைக்காக எய்ததாகத் தோன்றவில்லை. வெறுக்கத்தக்க மிகுதியான செல்வம் உடையவனாகத் தென்படுகிறான். அவன் மார்பில் முத்தாரம் இருக்கிறது. ஓரியாக இருப்பானோ? எப்படியாயினும் ஆகட்டும்.
இசைமுழக்கம்
விறலியரே! நாம் பாடுவோம். முழவை முழக்குங்கள். யாழை மீட்டுங்கள். தூம்புப் பறையைக் களிற்று முழக்கம் போல ஊதுங்கள். எல்லரி தட்டுங்கள். ஆகுளி என்னும் உடுக்கை அடியுங்கள். பதலை என்னும் பானைக்கடம் தட்டுங்கள். மதலை என்னும் மாக்கோலை வலத்தோளில் உயர்த்திப் பிடியுங்கள். இசையின் 21 துறைகளிலும் முறையாகப் பாடுங்கள். - என்றார்.
அப்படியே அனைவரும் பாடினர்.
இறுதியில் "கோ" எனக் கூட்டிசை முழக்கம் செய்தனர். 'கோ' என்பது அரசனைக் குறிக்கும் சொல் ஆதலின் ஓரி தன்னைக் கண்டுகொண்டதாக எண்ணி நாணித் தலைகுனிந்தான்.
புலவர் புகழுரை
இங்கு உன்னைப்போல் சிறந்த வேட்டுவர் இல்லை. உன் நாட்டுக்கு வருகிறோம் என்றார்.
சுரத்தில் கொடை
தான் வேட்டையாடிய மானைச் சுட்டுக் கொடுத்தான். தொட்டுத் தின்ன தேனும் கொடுத்தான். தன்னிடமிருந்த மணிகெஉவிலையெல்லாம் கொடுத்தான். இவன் ஈகை தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாத 'ஓம்பா ஈகை'


****************************************************************************************

கூத்தச் சுற்றத்தினர்! 

விவரங்கள்
பல ஆசிரியர்கள் ஆல் எழுதப்பட்டது
பாடியவர் : வண்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண். துறை: இயன் மொழி.

மழையணி குன்றத்துக் கிழவன், நாளும்,
இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்,
சுடர்விடு பசும்பூண், சூர்ப்பு அமை முன்கை,
அடுபோர் ஆனா, ஆதன் ஓரி
மாரி வண்கொடை காணிய, நன்றும்
சென்றது மன், எம் கண்ணுளங் கடும்பே;
பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வால்நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்,
யானை இனத்தொடு பெற்றனர்; நீங்கிப்,
பசியார் ஆகல் மாறுகொல்; விசிபிணிக்
கூடுகொள் இன்னியம் கறங்க,
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே?



புறநானூறு 153 வல்வில் ஓரி

ஓரியின் தந்தை பெயர் ஊதன். இதனால் இவனைப் புலவர் 'ஆதன் ஓரி' எனக் குறிப்பிடுகிறார். கொல்லிநாட்டை இவன் போரிட்டு வென்றதற்கான குறிப்பும் இதில் உள்ளது. இவன் தன் கையில் பசும்பூண் உணிந்திருந்தான்.
இவன் தன்னிடம் இரப்போர்க்கு யானைகளை அணிகலன்கள் பூட்டி நல்குவான். புலவரது சுற்றம் யானைகளோடு நீரில் பூக்காத குவளை மலரையும் (பொற்குவளை) விருதாகப் பெற்றனர். வான்நார் எனப்படும் வெள்ளிநாரில் தொடுத்த கண்ணிகளும், அணிகலன்களும் பெற்றனர்.
இவனிடம் இருக்கும்போது பசி என்பதே இவர்களுக்கு இல்லாமல் போனதால் பசி போக்க ஆடுவதையும் பாடுவதையும் மறந்துபோயினர்.



பாலை - பாலத்தனார் (நற்றிணை):

மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி
வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம்
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர்
மழவர் பெரு மகன் மா வள் ஓரி
கை வளம் இயைவது ஆயினும்
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே
தலைமகன் செலவு அழுங்கியது


குறிஞ்சி - பரணர் (நற்றிணை):

இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
பூந் தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன ஆர மார்பின்
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்
கலி மயில் கலாவத்து அன்ன இவள்
ஒலி மென் கூந்தல் நம் வயினானே
பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது



குறிஞ்சி - பரணர் (நற்றிணை):

நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்
திதலை அல்குல் பெருந் தோள் குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே
இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள் யாம் வந்தனம் எனவே
இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன்
தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லியது




வாரி நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த (கலித்தொகை):

 

வாரி நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்தஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ...
புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால்,
வதுவை அயர்வாரை கண்டு, 'மதி அறியா
ஏழையை' என்று அகல நக்கு, வந்தீயாய், நீ -
தோழி! - அவன் உழைச் சென்று
சென்று யான் அறிவேன்; கூறுக. மற்று இனி.
'சொல் அறியாப் பேதை - மடவை! - மற்று எல்லா!
நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று;
நினக்கு வருவதாக் காண்பாய். அனைத்து ஆகச்
சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு.
தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்
பெரு மணம் எல்லாம் தனித்தே ஒழிய -
வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ... அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்
அரு நெறி ஆயர் மகளிர்க்கு
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே?




யாம இரவின் நெடுங்கடை நின்று (அகநானூறு):

 

யாம இரவின் நெடுங்கடை நின்றுதேமுதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண்கோல் அகவுநர் வேண்டின், வெண்கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண்மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், 5
அளிஇயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து,
ஒள்வாள் மயங்குஅமர் வீழ்ந்தெனப், 'புள்ஒருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று 10
ஒண்கதிர் தெறாமை சிறகரிற் கோலி,
நிழல்செய்து உழறல் காணேன், யான் எனப்
படுகளம் காண்டல் செல்லான், சினஞ் சிறந்து,
உருவினை நன்னன், அருளான் கரப்பப்,
பெருவிதுப் புற்ற பல்வேள் மகளிர் 15
குரூஉப்பூம் பைந்தார் அருக்கிய பூசல்,
வசைவிடக் கடக்கும் வயங்குபெருந் தானை
அகுதை கிளைதந் தாங்கு, மிகுபெயல்
உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல,
நாணுவரை நில்லாக் காமம் நண்ணி 20
நல்கினள், வாழியர், வந்தே- ஓரி
பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லிக்
கார்மலர் கடுப்ப நாறும்,
ஓர்நுண் ஓதி மாஅ யோளே!



தோளும் தொல்கவின் தொலைந்தன; நாளும்

(அகநானூறு):


தோளும் தொல்கவின் தொலைந்தன; நாளும்அன்னையும் அருந்துயர் உற்றனள், அலரே,
பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான்,
எழுஉறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்,
நேரா எழுவர் அடிப்படக் கடந்த 5
ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிது என,
ஆழல் வாழி, தோழி !- அவரரே,
மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்
அறைஇறந்து அகன்றனர் ஆயினும், நிறைஇறந்து 10
உள்ளார் ஆதலோ அரிதே - செவ்வேல்
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி, 15
நிலைபெறு கடவுள் ஆக்கிய,
பலர்புகழ் பாவை அன்னநின் நலனே



உள்ளி வந்தெனன் யானே! (புறநானூறு):

 

பாடியவர்; பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன். திணை; பாடாண்.
துறை: வாழ்த்தியல்; பரிசில் கடாநிலையும் ஆம்.
சிறப்பு ; எழுவர் வள்ளல்கள் என்னும் குறிப்பு.

முரசுகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்,
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்;
காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப்போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரைக், கூர்வேல்,
கூவிளங் கண்ணிக், கொடும்பூண், எழினியும்;
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை,
அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்,
பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்,
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்,
கொள்ளார் ஓட்டிய, நள்ளையும்; என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, அழி வரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கென, விரைந்து இவண்
உள்ளி வந்தனென், யானே; விசும்புஉறக்
கழைவளர் சிலம்பின் வழையடு நீடி,
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!
இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!
இசைமேந் தோன்றிய வண்மையடு,
பகைமேம் படுக, நீ ஏந்திய வேலே!





அதனினும் உயர்ந்தது! (புறநானூறு):

 

பாடியவர்: கழைதின் யானையார்.
பாடப்பட்டோன்: வல் வில் ஓரி.
திணை:பாடாண். துறை: பரிசில்.

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.


குறிஞ்சி - தலைவன் கூற்று (குறுந்தொகை):

அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே.



குறிஞ்சி - தோழி கூற்று (குறுந்தொகை):

பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவு முயறல்
கேளே மல்லேங் கேட்டனெம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்
உயங்குதொறு முயங்கும் அறனில் யாயே.


மருதம் - கபிலர் (நற்றிணை):

விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று
எவன் குறித்தனள்கொல் என்றி ஆயின்
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்
காரி புக்க நேரார் புலம்போல்
கல்லென்றன்றால் ஊரே அதற்கொண்டு
காவல் செறிய மாட்டி ஆய்தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர் தம் கொழுநரைக் காத்தே
பரத்தை தனக்குப் பாங்காயினார்
கேட்ப நெருங்கிச் சொல்லியது


Category: 3 comments

வேட்டுவர் இல்லத்துப் பெண்விளக்கின் மாண்பு:

ஊரின் பெருமை உணர்த்தினாள் ஒருத்தி!  

 

"முன்றில் முஞ்ஞையடு முசுண்டை பம்பிப்,
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்,
பார்வை மடப்பிணை தழீஇப், பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,
இவ்வழங் காமையின், கல்லென ஒலித்து,
மான்அதட் பெய்த உணங்குதினை வல்சி
கானக் கோழியடு இதல்கவர்ந்து உண்டென,
ஆர நெருப்பின், ஆரல் நாறத்
தடிவுஆர்ந் திட்ட முழுவள் ளூரம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்,
தங்கினை சென்மோ, பாண! தங்காது,
வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே."


(புறநானூறு : பாடல் : 320

பாடியவர் : வீரைவெளியனார்) 

திணை: வாகை துறை : வல்லாண் முல்லை

பொருள் விளக்கம் :


கைம்மான் = யானை. கனைதுயில் = மிக உறக்கம்.

பார்வை மடப்பிணை = விலங்கினமான இளம் பெண்மான்.
கலை = ஆண்மான். இல்வழங்காமையின் = இல்லத்தை விட்டு வெளியே நடமாடாமல் ஒருபுறம் ஒதுங்கி அமைதல்.
தங்காது = குறையாமல். வேந்துதரு விழுக்கூழ் = தனக்குப் பகை வேந்தர் கப்பமாகத் தந்ததும், தன் வேந்தர் தந்த பரிசுப் பொருளும்.

குறிப்பு : வீரைவெளியனார் தோன்றிய வீராம்பட்டினம் புதுவைக்கு அருவே உள்ளது என புறநானூறு உரை கண்ட அறிஞர் ஒளவை துரைசாமிப் பிள்ளை கூறுகிறார்.


வீராம்பட்டினமென்பது புதுவைக்கருகில்

விளங்கிடும் ஊராம் - புலவர் பிரான்
வீரைவெளியனார் தோன்றிய இடமென, இதனை
விளக்குவர் அறிஞர்!
தித்திக்கும் கவிதை தீட்டி அகத்துறையில் புகழ்பெற்ற
தித்தனார் எனும் கவிஞர் இவர் பெற்ற மகனேயாவார்.
திறன்மிக்க மகனை ஈன்ற வெளியனாரும்
புறப்பாட்டில் ஒரு புதுமைதனைக் காட்சியாக்கி,
வேட்டுவர் இல்லத்துப் பெண்விளக்கின் மாண்புதனைக்
காட்டுகின்றார் கவிதை ஒளிக் காவியமாய்!

வேந்தனிடம் விடைபெற்றுக் களம் சென்ற தளபதி

வெற்றியினை மாலையாக்கிச் சூடிக்கொண்டு
விருதுபல பெற்று வீரக்கொடி விண்தவழ
வீடு திரும்பினான் என்ற செய்தி கேட்டு - அவனைப்
பாடிப் பரிசில் பெற பாணன் ஒருவன் சென்றபோது - அவன்
நாடி வந்த தளபதியின் நல்நெஞ்சக் கொடை இயல்பை
நற்றமிழில் பாடுகின்றார், வீரை வெளியனார்.

வெற்றி பெற்ற நாட்டுப் பொருள்களையும் - நமது

வேந்தர் வழங்கியுள்ள விருதுப் பொருள்களையும்
ஈந்து சிவந்திட இரு கரமும் கொண்டவன்தான்
பாய்ந்து பகைவீழ்த்தி வந்துள்ள வீரன் எனப் புகழ்ந்து - அன்பு
தோய்ந்து இதயமுடன் அள்ளித் தருவான் பரிசுகளை என்று,
ஆழ்ந்து அறிவுசால் வீரைவெளியனார், பாணர்க்கு அறிவித்து மகிழ்ந்து,

அவ்வூரின்கண் அரும்பிமலர்கின்ற

அழகு மகளிர் பண்பு நலமும் பாடுகின்றார், கேளீர்!

முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும்

பின்னிப் படர்ந்து விரிந்து பரந்ததால்
பந்தல் என ஒன்று வேண்டாம் வெயில் மறைக்க என
பலாக்கனிகள் தொங்குகின்ற அடர் மர நிழலில் கீழே

வேடனொருவன் உறக்கத்தைத் தழுவிக்கொண்டு,

வேல்பிடித்த கரத்தைக்கூடத் தளர்த்திக் கிடந்தான்.
வேலுக்குப் பதிலாக அவனருகே படுத்துக்கொள்ள
சேலுக்கு இணையான விழிபடைத்த அவன் துணைவி, விருப்பங்கொண்டு;

மெல்ல நடந்து இல்லத்துக்குள்ளிருந்து - அந்த

வெல்லப்பாகு இதழாள்; கொடிப்பந்தல்தனைக் கூர்ந்து நோக்குகின்றான்.

களைப்புற்ற கணவனருகில் ஒரு மலர் போல ஒலியின்றி பட்கார வேண்டுமென்றும்,

கண்களின் பசி தீர அவன் கட்டழகைப் பார்த்துக் களித்திட வேண்டுமென்றும்,

தாமரை மொட்டிரண்டைச் சற்றுத் தாமதாய் அவன்

தடந்தோளின் பக்கம் திருப்பினால் போதுமென்றும்,
அவசரப்பட்டு ஒரு முத்தம் அரும்பு மீசை உதட்டின்மேல்
அளித்துவிடின், அவன் விழித்துக்கொள்ள நேருமென்றும்,
ஆனைகளை வேட்டையாடி அயர்ந்து தூங்கும்
ஆளனது ஓய்வு கலைத்தல் அவன் உடல் நலனுக்கு ஆகாதென்றும்,

முழுத் தூக்கம் முடியட்டும்; பின்னர் காலைக்கதிர்

எழுமட்டும் முடியாமல் தொடரலாம் இன்பமென்றும்,
தொலைவில் நின்று அத்தோகை நல்லாள் - காற்றில்
அலை அலையாய் எழுகின்ற கருங் கூந்தல் கோதி,
எண்ணமிட்டு நின்றிருந்தாள் - அவள்
வண்ணமிட்ட மார்பகமோ உயர்ந்துயர்ந்து உயிரை வாங்கித்
தணிந்து, பின்னும் உயர்ந்தெழுந்து மேன்மேலும் அவள்
தணியாத தாபத்தை வெளிப்படுத்தும்!
துணிந்து சென்று சென்று அவன்மேல் வீழ்ந்துவிட்டால் - நல்ல
தூக்கத்தைக் கலைத்த குறை, அவள் மனதைக் குடையும்!

அதனாலே


அவனருகிற் சென்று அசையாமல் படுத்துக்கொண்டு

அயர்வு நீங்கி அவன் விழிப்புற்றுப் புரளும்போது;
அத்தான் என அழகு விரல்களாலே முகம் தடவி
முத்தாக ஒரு முதூதம் கொடுப்பதென முடிவு கட்டி,
காட்டு வழியில் தேய்ந்து காய்த்துப்போன கால்களையும்
காய்ந்த சருகுகளின் மேல் பூப்போல ஓசையின்றி ஊன்றி,
விழிமூடித் துயில் கொள்ளும் வேடனிடம்; தொப்புள்
சுழியின் எழில் மூடாமல் சுகந்தமிகு வசந்தமென நடக்கலுற்றாள்!

அப்போது,


பலாக்கனிகள் குலுங்குகின்ற மரநிழலில்

படர்ந்திருக்கும் கொடிகள் நிறை இலைமறைவில்
படுத்திருக்கும் வேடனுக்கு மிக அருகாமையில்
தடுத்துரைத்த பெண்மான் ஒன்றைத் தழுவிக்கொண்டு
ஆண்மான் தந்த அருஞ்சுகத்தை, இழப்பதற்கும் மனமின்றி, - அந்தப் பெண்மான்
வீண் முயற்சி எடுத்து மீண்டும் தடையொன்றும் சொல்லாமல்,
இருமானும் இன்பத்தின் உச்சியிலே மிதந்து
தருநிழலில், தவமிருந்து வரம்பெற முனைவோர் போல - தலைமறந்த நிலையுற்ற,
இயற்கையின் திருக்கூத்தை அந்த இல்லத்தரசி
இருவிழி கொட்டாமல் பார்த்தயர்ந்தாள் !

உடனே


அவளுக்கோர் அச்சம் உள்ளத்தில் வெளிச்சமிட

அப்பால் ஓர் அடிதனை எடுத்து வைக்கவும் தயக்கமுற்றாள்!

பலாமரத்து இலைச்சருகுகளில்

படர்ந்துள்ள கொடியுதிர் மலர்களில் - தனது
பாதம் படுகின்ற சிறிய ஒலி கூட;
இசை மூடி இவ்வுலகை மறந்து துயில்கின்ற
இளமை மிகு வேடனையே எழுப்பிவிட்டால்,
ஆர்த்தெழுகின்ற அவன் தோற்றம் கண்டு - காதல்
போர்க்களத்து வெற்றிக்குப் போட்டியிடும்
ஆண்மானும் பெண்மானும் அடைய இருந்த இன்பமெலாம்
ஊண் பொங்கும் நேரத்தில் உலைப்பானை கவிழ்ந்தது போலாகி
ஓடி உயிர் காத்துக் கொண்டாலே போதுமென இருமானும்
வாடிப் பிரிய நேரிடுமே எனவும் எண்ணினாள்; அல்லது
வேடன் எழுந்தவுடன் அருகிருக்கும், தனது
வேலை எடுத்து வீசிவிட்டால் - காதல்
பாடந்தனைச் செயல் மூலம் பயிலுகின்ற ஈருயிரும்
கலவி நடுப்பாதையிலே பலியாக வேண்டும் என்றும்
கவலை மிகக் கொண்டுவிட்டாள்!

இவையிரண்டு தீங்கினையும் தவிர்ப்பதற்குத் தக்க வழி

இங்கேயே நான் மறைந்து நிற்பதுதான், என்று
அசையாத சிலைபோல இருந்துவிட்டாள் - தெவிட்டாத
இசைபோல வீசும் தென்றல்; அவள் பண்பை வாழ்த்திப் பாடிற்றாங்கே!
மானினத்தின் உணர்வுக்கு மதிப்பளித்துக் கருணைதனை
மழையாகப் பொழிகின்ற மாதரசு வாழ்கின்ற இவ்வூரில்
மானிடராம் பாணர்க்குப் பரிசு இல்லை என மறுப்போர் உண்டோ?
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியைப்
பாவை இவள்தான் மெய்ப்பிக்கின்றாள் என்று
பாணர்க்கு அவ்வூரின் பண்பாட்டை வீரவெளியனார் எடுத்துக்காட்டி
பரிசுபெறச் சென்றிடுவீர் பகைமுடித்த தலைவனிடம் எனக்கூற
விரைந்திட்டார் வேகமாகப் பாணர்; வீர
வெளியனார்க்கு நன்றியினைக் குவித்தவாறு!



எழுதியவர் :கருணாநிதி (courtesy: www.eluthu.com)

Category: 0 comments

இலக்குகள் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும்:



இலக்கு.


யானையை எய்யச் சென்றவன் யானையைப் பிடித்து வெற்றியோடு திரும்புவதும் உண்டு.

சிறுபறவையை வேட்டையாட எண்ணியவன், வெறுங்கையுடன் திரும்புவதும் உண்டு.

அதனால் நமது இலக்குகள் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும்.

இலக்கில்லாத வாழ்க்கை முள்ளில்லாத கடிகாரத்தைப் போல அது யாருக்கும் பயன் தருவதில்லை இவ்வரிய கருத்தை உணர்த்தும் சங்க இலக்கியப் பொன்மொழி,



"யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே"
Category: 0 comments

வேட்டுவ மன்னன் "கண்டீரக் கோப் பெருநள்ளி"

























பாடியவர் : வன்பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண். துறை: பரிசில்.

நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி,
‘வரவுஎமர் மறந்தனர்; அது நீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே


நளி மலை நாடன்! 

விவரங்கள்
பல ஆசிரியர்கள் ஆல் எழுதப்பட்டது
பாடியவர் : வன் பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.
சிறப்பு:தோட்டி மலைக்கு உரியவன் இவன் என்பதும், இவன் வேட்டுவக் குடியினன் என்பதும்,

கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித்,
தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்த என்
உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி,
மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்,
வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்,
செல்வத் தோன்றல், ஓர் வல்வில் வேட்டுவன்,
தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ,
இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை,
கான்அதர் மயங்கிய இளையர் வல்லே,
தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, ‘நின்
இரும்பேர் ஒக்கலொடு தின்ம்’ எனத் தருதலின்,
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி,
நல்மரன் நளிய நறுந்தண் சாரல்,
கல்மிசை அருவி தண்ணெனப் பருகி,
விடுத்தல் தொடங்கினேன் ஆக, வல்லே,
“பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்
பிறிதொன்று இல்லை; காட்டு நாட்டோம்” என,
மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்
மடைசெறி முன்கை கடகமொடு ஈத்தனன்;
‘எந்நா டோ?’ என, நாடும் சொல்லான்!
‘யாரீ ரோ!’ எனப், பேரும் சொல்லான்;
பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே;
‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
பளிங்கு வகுத் தன்ன தீநீர்,
நளிமலை நாடன் நள்ளிஅவன்’ எனவே.


புறநானூறு 148 கண்டீரக் கோப்பெரு நள்ளி:

அருவி கொட்டும் மலைநாட்டு அரன் நள்ளி. அவனைப் பாடுபவர்களுக்கு அவன் யானைகளைப் பரிசிலாகத் தருவானாம். வன்பரனர் அவனைப் பாடும்போது பரிசில் பெறுவதற்காக அவன் செய்யாத்தனவற்றைப் பொய்யாகக் பாடமாட்டாராம்.

புறநானூறு 149 கண்டீரக் கோப்பெரு நள்ளி:

நள்ளி வன்பரனரை அவரது குடும்பத்தோடு காப்பாற்றுவதால், அவரது குடும்பமே மாலையில் மருதப்பண் பாடுவதையும், காலையில் செவ்வழிப்பண் பாடுவதையும் மறந்துவிட்டதாம்.

புறநானூறு 150 கண்டீரக் கோப்பெரு நள்ளி:

தோட்டி நளிமலை நாடன் என்று போற்றப்படும் அரசன் நள்ளி. தோட்டி இப்போது தொட்டபெட்டா என்னும் பெயர் பூண்டு விளங்குகிறது. இவன் வல்வில் வேட்டுவன் என்று போற்றப்படுகிறான்.
நள்ளி தன்னை எப்படிப் பேணினான் என்பதை இப்பாடலில் புலவர் குறிப்பிடுகிறார். குளிரில் நடுங்கும் பருந்தின் சிறகு போல அவரது ஆடை கிழிந்திருந்ததாம். தன்னை அறியாமல் கால் போன வழியில் தனக்குத் தெரியாத வேறொரு நாட்டுக்கு அவர் வந்துவிட்டாராம். வழியில் ஒருவன் இவரது உடல் வருத்தத்தையும், உள்ள உலைவையும் கண்டானாம். அவன் மானை வேட்டையாடிக் குருதி படிந்த கழல் அணிந்திருந்தானாம். தலையில் திருமணி முடி அணிந்திருந்தானாம். அதனால் ஒரு செல்வத் தோன்றல் போல் காணப்பட்டானாம். அவனைப் பார்த்ததும் புலவர் அவனைத் தொழுது எழுந்தாராம். அவனோடு வந்த இளையர் வருவதற்கு முன் தன்னிடமிருந்த ஞெலிகோலில் தீ மூட்டி தான் வேட்டையாடிய மானைச் சுட்டுப் புலவரும் அவரது சுற்றத்தாரும் தின்னும்படி கொடுத்தானாம். அவர்கள் வயிறார உண்டு பசி நீங்கி, அருவி நீரைப் பருகிவிட்டுச் செல்லத் தொடங்கினார்களாம். உடனே அவன் தன் மார்பில் அணிந்திருந்த விலைமதிக்க முடியாத ஆரத்தையும், கையில் அணிந்திருந்த கடகத்தையும் கழற்றிப் புலவர்க்குக் கொடுத்தானாம். புலவர் அவனிடம், "நீர் யார்? எந்த நாட்டில் இருப்பவர்?" என்று வினவினாராம். அவன் எதுவுமே சொல்லாமல் போய்விட்டானாம். பின்னர் புலவர் அங்கே வந்த சிலரைக் கேட்டாராம். அவன் தோட்டி மலை மக்களைக் காப்பவனாம்."நளிமலை நாடன் நள்ளி"யாம்.
Category: 5 comments